Monday, September 16, 2019

பெண்பிள்ளைகள் ஓடிப்போவதற்கு என்ன காரணம்?

பெண்ணைப் பெற்ற ஈமானியப் பெற்றோரே..!

உங்கள் பெண்பிள்ளைகளை உங்களது கண்களைப் பாதுகாப்பதைவிட மிகக்கவனமாகப் பாதுகாத்திடுங்கள்!

"என் மகள் கல்லூரியில் பயிலுகிறாள்"
என்று பெருமை பீற்றுவதை விட்டு விட்டு
அவளைக் கண்காணித்து,- விரைவாக  நல்ல மணமகனுக்கு நிகாஹ் செய்து கொடுங்கள்!

எத்தனையோ வாலிபப் பெண்பிள்ளைகள் ஈமானைக் குழிதோண்டி புதைத்து விட்டு-,

ஆண்டாண்டு காலமாக பெற்று வளர்த்த பெற்றோர்களை கதறவிட்டு விட்டு-,

ஓடிச்சென்று எவனையோ திருமணம் செய்கிறேன் என்ற பெயரில் விபச்சார வாழ்வைத் தேடித்-தொலைக்கின்றனர்-.

குறுகிய காலத்தில் அவளை அவன் அனுபவித்துவிட்டு குப்பைகள் தூக்கியெறியப்படுகிற முட்புதரில் வீசிவிடுகிறான்!

நமது பெண்பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்புவதுடன்-,
அவளது கையில் ஒரு சாணளவுக்கு ஆண்ட்ராய்டு மோபைலும்
தவறாது ரீசார்ஜும் பெற்றோர்களாகிய நீங்கள் செய்து கொடுத்தால்...

அவளை செயல் ரீதியாகவும் இன்னும் உடல் ரீதியாகவும் நீங்களே விபச்சாரியாக மாற்றிவிடுகிறீர்கள் என்றுதான் அதற்குப் பொருள்!

தவறுக்கான வாயிலைத்திறந்து விட்டுவிட்டு,
பின்பு மாபாதகச்செயல் நடந்த பின் உங்களது கூச்சலும் அழுகையும் ஒப்பாரியும் சல்லிக்காசுக்குக்கூட பலன்-தராது!

ஈமானை முற்படுத்தி வாழுங்கள்!
மானம் மரியாதை தாமாகத் தேடிவரும்!!

*மௌலவி*
*அப்துர் ரஹ்மான் ரஹ்மானி*
06-01-1441 / 7-09-2019

(மீள்பதிவு)

No comments:

Post a Comment

மஸ்ஜிது நிருவாகிகள் சிலர் ஆலிம்களோடு பகைமை கொள்வதேன்?

🔰 *கண்ணியமிகு மஸ்ஜிதுகளின் நிருவாகப் பெருமக்களுக்கு...* 💠 தங்களது மஸ்ஜிதில் சேவையாற்றுகிற *"இமாம் பெருந்தகை...