☘️ Z ஆதில்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...
கண்ணியம் நிறைந்த நன் மக்களே...
நான் உங்களிடம் சலவாத் ஓதுவதின் சிறப்பு குறித்து பேச விழைகிறேன்...
நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் அந்த நபியின் மீது சலவாத் ஓதுகின்றனர்...
... ஈமான் கொண்டோரே நீங்களும் ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுங்கள் என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்...
... உலகில் முஃமினாக பிறந்த ஒவ்வொருவரும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும்...
... நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பெயரை நாம் உச்சரிக்கும் போதும் பிறரால் அதை நாம் கேட்கும்போதும் பெருமானார் மீது உடனே ஸலவாத்து சொல்ல வேண்டும்...
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஒருமுறை ஸலவாத்து சொன்னால் பத்து நன்மைகள் எழுதப்பட்டு 10 பாவங்கள் மன்னிக்கப்பட்டு 10 பதவி உயர்வுகளில் வழங்கப்படுகிறது என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்...
ஆனால் இக்காலத்தில் சலவாத் சொல்வதில் கஞ்சத்தனம் செய்பவர்கள் நிறைய உண்டு...
ஆனால் சஹாபா பெருமக்கள் தமது வாழ்நாள் முழுக்க சலவாத் ஓதுவதிலேயே கழிக்க வேண்டும் என்று பிரியப்பட்டார்கள்.
எதைச் செய்தால் அல்லாஹ் நம் மீது அருள் செய்வானோ அந்த விஷயங்களை மட்டும்தான் நபி அவர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்...
தன்மீது ஸலவாத் ஓதுவதால் அல்லாஹ்வின் அருள் நம் மீது ஏற்படுகிறது என்பதால்தான் என் மீது நீங்கள் சலவாத்துச் சொன்னால் உங்களுக்கு உயர்வு உண்டு என்று நபி அவர்கள் சொன்னார்கள்...
ஸலவாத் ஓதுவதால் மனம் நிம்மதி பெறுகிறது முகம் அழகு பெறுகிறது நமது காரியங்களிலே வெற்றி ஏற்படுகிறது...
எனவே இந்த ஸலவாத்தை நாம் அனுதினமும் ஓதிட வேண்டும் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் மீது அருள் செய்வானாக ஆமீன்
No comments:
Post a Comment