அஷ்ரப்
✅ அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
கண்ணியம் நிறைந்த நன்மக்களே...
சைத்தான் என்பவன் நம்மை எல்லா நேரமும் கண்காணித்து நமக்கு இடையூறு செய்து கொண்டிருப்பவன் ஆவான்...
எனவே அந்த சைத்தானின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் நாம் பாதுகாவல் தேடிக் கொண்டிருக்க வேண்டும்...
ஆனால் இன்று மனிதர்களிலே சிலரோ அல்லது பலரோ அந்த ஷைத்தானினுடைய சில குணங்களை எடுத்து நடப்பவர்களாக நாம் காண்கிறோம்...
குறிப்பாக கோபப்படுதல் என்பது சைத்தானிலிருந்து வெளிப்படுகிற ஒரு குணமாகும்...
... ஒரு மனிதனுக்கு கோபம் ஏற்பட்டு விட்டால் அவனது பேச்சும் செயல்பாடுகளும் அநாகரிகமாக மாறிவிடும்...
இதனால் நல்ல நட்புகளை இழக்க வேண்டி வரும்
நல்ல உறவுகளை இழக்க வேண்டி வரும்
நல்ல தோழமைகளை இழக்க வேண்டி வரும்...
... மட்டுமல்ல சில பல நேரங்களில் நன்மக்களினுடைய மன வேதனைக்கும் ஆளாக நேரிடும்...
எனவே இந்த கோபத்திலிருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றால்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லித் தரும் ஒரு செயலை நாம் பின்பற்ற வேண்டும்...
உங்களில் ஒருவர் நின்று கொண்டிருக்கும் போது கோபம் வந்தால் அவர் அமர்ந்து கொள்ளவும்...
அமர்ந்திருக்கும் போது கோபம் வந்தால் அவர் படுத்துக்கொள்ளவும்...
நமது நிலையை இது போன்று மாற்றும் பொழுது கோபம்
குறைய வாய்ப்பிருக்கிறது...
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்...
கோபம் சைத்தானின் தீண்டுதலால் ஏற்படுகிறது...
சைத்தான் நெருப்பினால் படைக்கப்பட்டிருக்கிறான்..
நெருப்பை அணைப்பதற்கு தண்ணீர் தேவை...
எனவே உங்களில் ஒருவருக்கு கோபம் ஏற்பட்டால் அவர் ஒழு செய்து கொள்ளவும் என்று கூறினார்கள்.
இவை மட்டுமல்ல வீண் பெருமை கொள்வதும் தற்பெருமை கொள்வதும் அகம்பாவம் கொள்வதும் இவை யாவுமே சைத்தானின் குணங்கள் ஆகும்...
சுவனத்தில் வாழ்ந்து வந்த சைத்தான் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதற்கு காரணமே அவன் தற்பெருமையும் வீண் அகம்பாவமும் பேசியதுதான்!
ஆகையால் இரவு நேரத்தில் நாம் படுக்கும்பொழுது ஆயத்துல் குர்ஸி ஓதிக்கொண்டு தூங்கினால் சைத்தானின் தீண்டுதல் நமக்கு ஏற்படாது என்று ஹதீசுகளில் சொல்லப்பட்டுள்ளது.
அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்று சொல்வதும் சைத்தானிடமிருந்து பாதுகாப்பு தேடுகிற ஒரு துஆவாகும்.
எனவே சைத்தானின் தீங்குகளில் இருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.