Wednesday, May 6, 2026

மக்தப்

 ✅ Z பைஸான்


 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ 


 எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் 

 நமது மதரசா ஆண்டு விழா நடைபெறும் இந்தருணத்தில்...


... நான் உங்களிடம்

 துவாவை பற்றி சில வார்த்தைகள் பேச விழைகிறேன்...


 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆ என்பது வணக்கத்தின் மூளை என்று சொன்னார்கள் 


 அல்லாஹ்விடத்தில் நாம் எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கேட்டுப் பெற முடியும்...


... ஆனால் நாம் துஆவின் மூலமாக கேட்பது ஹலால் ஆனதாக இருக்க வேண்டும்...


 ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடத்தில் கேட்டால் அவன் எரிச்சலடைவான்...


... ஆனால் அல்லாஹ்விடம் நாம் கேட்காமல் இருந்தால் அவன் எரிச்சல் அடைவான்...


 நமது துஆ ஒப்புக்கொள்ளப்படுவதற்கு சில ஒழுங்கு முறைகளை நாம் பேண வேண்டும்...


 முதலாவதாக ஹலாலான உணவும் உடையும் அவசியமாகும்...

... நம்முடைய உணவிலோ உடையிலோ வருமானத்திலோ ஹராம் கலந்திருந்தால் நமது துஆ ஏற்றுக் கொள்ளப்படாது...


... துவா செய்துவிட்டு நாம் அவசரப்படாமல் இருக்க வேண்டும்...


... அல்லாஹ் என்னுடைய துவாவை ஏற்றுக் கொள்வான் என்ற உறுதியோடு நாம் துஆ செய்ய வேண்டும்...


... பொடுபோக்குத்தனமாக துவா கேட்கக் கூடாது...


... நீ விரும்பினால் என்னை மன்னித்துவிடு நீ விரும்பினால் என்னை மன்னிக்காதே என்றெல்லாம் துவா செய்யக்கூடாது...


.,. உறவுகளை முறிப்பதற்காக துஆ செய்யக்கூடாது...


... துவா செய்யும் பொழுது அல்லாஹ்வை புகழ்ந்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் ஓதிக்கொள்ள வேண்டும்...


... அல்லாஹ்விடத்தில் ஒரு விஷயத்தை கேட்பதில் நாம் சடைந்து விடக்கூடாது தொடராகக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்..!


 இது போன்ற ஒழுக்கங்களை பேணி நாம் துவா செய்யும் பொழுது நமது துஆ கபூலாவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது...


 எல்லாம் வல்ல அல்லாஹ் நமது துஆக்களை அங்கீகரிப்பானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்

No comments:

Post a Comment

மக்தப்

 அஷ்ரப் ✅ அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ   கண்ணியம் நிறைந்த நன்மக்களே...  சைத்தான் என்பவன் நம்மை எல்லா நேரமும் கண்காணித்து...