✅ ஃபவாது
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
கண்ணியம் நிறைந்த நன் மக்களே...
நான் உங்களிடம் நாவின் விபரீதங்கள் குறித்துப் பேச விழைகிறேன்...
அல்லாஹ் மனிதனுக்கு எத்த னையோ அருட்கொடைகளை வழங்கியுள்ளான்...
அவைகளில் மிக முக்கியமானது
பேசும் நாவாகும்...
நாவை ஒரு கூரான கத்திக்கு ஒப்பாகக் கூறலாம்...
நாவைக் கொண்டு சுவர்க்கம் செல்லவும் முடியும்...
அதே நாவைக் கொண்டு நரகமும் செல்ல முடியும்...
ஆகவே நாம் நமது
நாவை பேணிப் பாதுகாத்திட வேண்டும்.
மனிதனின் உயர்வுக்கும், தாழ்வுக்கும் காரணமே நாவுதான் என்று சொன்னால் அது மிகையாகாது.
இதை எப்படி நாம் பயன்படுத்துகிறமோ அதன் படியே முடிவும் இருக்கும்.
சிலர் இந்த நாவை அழகாக பயன்படுத்தி மக்களிடத்தில் வெற்றி பெற்று விடுகின்றனர்
...சிலர் இதே நாவை முறையற்ற வழியில் பயன்படுத்தி “மனிதர் களில் தரம் தாழ்ந்தவர்கள்” பட்டியலில் இடம் பெற்று விடுகிறார்கள்.
இப்படிப் பட்ட நாவைப்பற்றி
நானும் ஹதீஸும் என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம்...
நிச்சயமாக அடியான் சில நேரங்களில் அல்லாஹ்வுடைய
பிரியத்திற்குரிய விஷயங்களை
அதன் சிறப்பை உணராமலேயே கூறுகிறான்.
இருப்பினும்
அதற்காக அல்லாஹ்
அவனது
அந்தஸ்துகளை உயர்த்துகிறான்.
நிச்சயமாக அடியான் சிலவேளைகளில் அல்லாஹ்வின் கோப த்திற்குரிய விஷயங்களை
அதன் தீங்கு களை உணராமலேயே பேசிவிடுகிறான். அதன் காரணமாக அவன் நரகில்
வீழ்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
ஓர் அடியான் சில வார்த்தைகளை மொழிகிறான். ஆனால் அதைப்பற்றி (நல்லதா? கெட்டதா? என்று) சிந்திப்ப தில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும், மேற்கிற்கும் மத்தியிலுள்ள தூரத்தைவிட அதிகமான தூரத்தில் நரகில் விழுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
(நாளை மறுமையில்) மனிதர்களை முகக் குப்புற நரகத்தில் வீழ்த்துவது அவர்களின் நாவு செய்த தவறே தவிர வேறெதுவும் இல்லை என ஒரு நீண்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார் கள். (திர்மிதி)
அரைகுறை ஞானமுள்ள எந்த விஷ யத்தையும் நாம் வெளிப்படுத்தக் கூடாது ஏனெனில் நாம் பேசக்கூடிய ஒவ்வொரு சொல்லையும் வானவர்கள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் தவறாகப் பயன்படுத்திய வார்த்தைகளைப் பற்றி மறுமை நாளில் விசாரிக்கப்பட்டு, அவற் றிற்குரிய தண்டனை வழங்கப்படும். (அல்-ஹதீஸ்)
நாம் சிந்திக்காமல் பேசும் சில வார்த் தைகள் நம்மை நரகத்தின் அடித்தளத் திற்கே கொண்டு போய்ச் சேர்த்து விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதை மனதில் பதிய வைக்க வேண்டும்.
இந்த ஹதீஸ் நாவை எந்த அளவிற்கு கவன மாகக் கையாள வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்துகின்றது. நாவினால் நிகழும் சில தவறுகள் இங்கே குறிப்பிடப் படுகின்றன. அவற்றைத் தெரிந்து முற்றிலும் அப்படிப்பட்ட தவறுகளிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment