Wednesday, May 6, 2026

மக்தப்

 ✅ ஸல்மான் மாலிக்


 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...


 கண்ணியம் நிறைந்த நன்மக்களே...


 நான் உங்களிடம் உணவு உண்பதின் ஒழுக்கம் குறித்து பேச விழைகிறேன்...


 உணவு உண்ணும் போது 'பிஸ்மில்லாஹ்' என்று சொல்லவேண்டும்...


ஒவேளை பிஸ்மில்லாஹ்

 கூற மறந்தால், 'பிஸ்மில்லாஹி அவ்வலஹு வ ஆகிரஹு' என்று 

கூற வேண்டும்"


வலது கையினால் உண்ண வேண்டும்


"உங்களில் எவரும் இடது கையால் உண்ணவோ, பருகவோ வேண்டாம். ஏனெனில், ஷைத்தான் இடது கையால் உண்கிறான், பருகுகிறான்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.


 வயிறு புடைக்க சாப்பிடுவது நல்லதல்ல...


... அதனால் அஜீரணக் கோளாறும் இன்ன பிற தொல்லைகளும் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு.


 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் 


 "மனிதன் நிரப்புகிற பாத்திரங்களிலேயே தன் வயிற்றை நிரப்புவதைப் போன்ற கெட்ட பாத்திரம் எதுவும் இல்லை என்று கூறினார்கள்


ஆதமுடைய மகனுக்கு முதுகெலும்பை நேர்ப்படுத்த சில கவள உணவே போதுமானது என்றும்,


 ஒருவேளை நிரப்பவேண்டியிருந்தால், மூன்றில் ஒரு பங்கு உணவுக்கும், மூன்றில் ஒரு பங்கு பானத்திற்கும், மூன்றில் ஒரு பங்கு சுவாசத்திற்கும் ஒதுக்குங்கள் என்றும் கூறினார்கள்


 உணவை வீணாக்கக் கூடாது. கீழே விழுந்த உணவில் உள்ள அசுத்தங்களை நீக்கிவிட்டு உண்ண வேண்டும். இது அருட்கொடையை மதிப்பதற்கான அறிகுறியாகும்.


 சாப்பிடும் போது கவனம் சிதறாமல் உணவில் கவனம் செலுத்துவது சிறந்தது.


"நீங்கள் உண்ணும் உணவை நேசியுங்கள், அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்" என்று நபி (ஸல்) கூறினார்கள், இது கருணை மற்றும் பெருந்தன்மையின் அடையாளமாகும். 



இந்த ஒழுக்கங்களைப பேணி

உணவு ஒரு அருட்கொடை என்பதை உணர்ந்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, ஆரோக்கியமாக வாழ்ந்திட 

 அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்

No comments:

Post a Comment

மக்தப்

 அஷ்ரப் ✅ அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ   கண்ணியம் நிறைந்த நன்மக்களே...  சைத்தான் என்பவன் நம்மை எல்லா நேரமும் கண்காணித்து...