Wednesday, May 6, 2026

மக்தப் மாணவர்களின் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ 

 கண்ணியம் நிறைந்த நன் மக்களே...

 நான் உங்களிடம் குர்ஆன் ஓத கற்றுக் கொள்வதால் ஏற்படும் சிறப்புகள் பற்றி பேச விழைகிறேன்...

... குர்ஆன் என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அற்புதமான வேதமாகும்...

... அதனை ஓதுவதும் அதில் உள்ள படிப்பினைகளை எடுத்துக் கொள்வதும் அதன் வழி நடப்பதும் முஸ்லிம்கள் மீது கடமையாகும்...

... குறைந்தபட்சம் நாம் அதை ஓத கற்றுக் கொள்ள வேண்டும்...

... பெற்றோர்கள் கற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அவர்களது பிள்ளைகளுக்கு குர்ஆனை கற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டும்...

... நமது பள்ளிவாசலில் அனுதினமும் மாலை நேரத்தில் மக்தப் மதரஸா நடைபெறுகிறது...

 நமது மதரசாவில் குர்ஆன் ஓதக் கற்பித்தல்  உள்ளிட்ட நல்லொழுக்கங்கள் கற்றுக் கொடுக்கப்படுகிறது...

 தமது பிள்ளைக்கு எந்த பெற்றோர் குர்ஆன் ஓத கற்றுக் கொள்ள முயற்சிப்பாரோ அதற்கான ஏற்பாடுகளை செய்வாரோ...

.... மறுமை நாளில் அந்த பெற்றோருக்கு அல்லாஹ் வழியினால் ஆன கிரீடத்தை அணிவித்து கண்ணியப்படுத்துவான்...

... எந்தப் பெற்றோர் தமது குழந்தைகளை இறையச்சத்தோடு நல்லொழுக்கத்தோடு வளர்ப்பார்களோ அந்த பெற்றோருக்கு மறுமை நாளில் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்...

 எனவே பெற்றோர்களே உங்களது பிள்ளைகளுக்கு குர்ஆன் கல்வியை கொடுத்திடுங்கள்...

... மதரசாவுக்கு தினந்தோறும் தவறாது அனுப்பி வைத்திடுங்கள்...

 குர்ஆன் ஒருவர் ஓதுகிறார் என்றால் ஓர் எழுத்துக்கு பத்து நன்மைகளை அல்லாஹ் வழங்குகிறான்...

... குர்ஆன் ஓதுபவரை சுற்றிலும் மலக்குகள் ஸகீனத் என்ற அமைதியை இறக்குகிறார்கள்...

... குர்ஆன் ஓதுபவரின் முகம் பிரகாசமாக காட்சியளிக்கும்...

 வீடுகளில் வைத்து குர்ஆன் ஓதும்போது அங்குள்ள தீய சக்திகள் வெளியேறி அந்த வீட்டில் குடியிருப்பவர்களுக்கு மன அமைதி ஏற்படும்...

 இதுபோன்ற பல்வேறு விதமான பலாபலன்களை கொண்ட குர்ஆனை நாம் ஓதக் கற்றுக் கொள்வோம் அதன் வழி நடப்போம்...

 எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்

No comments:

Post a Comment

மக்தப்

 அஷ்ரப் ✅ அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ   கண்ணியம் நிறைந்த நன்மக்களே...  சைத்தான் என்பவன் நம்மை எல்லா நேரமும் கண்காணித்து...